பெயர் : சவரிமுத்து பீலிக்ஸ் ஜெயசிங்கம்
பிறப்பு :
இறப்பு : 2013-02-03
பிறந்த இடம் : இளவாலை
வாழ்ந்த இடம் : ஜேர்மனி
பிரசுரித்த திகதி : 2013-02-11
இளவாலையைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட சவரிமுத்து பீலிக்ஸ் ஜெயசிங்கம் (03.02.2013) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து (தம்பிராசா) மேரிப்பிள்ளை தம்பதியரின், இளைய மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை மாகிறேட் தம்பதியரின் மருமகனும், றீற்றா இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும், அன்ரனி ஜெய்சங்கர் (பாபுகனடா), யூட் தம்பிராஜா (வளன் ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும், திருமதி திரேசா மரியாம்பிள்ளை (மலேசியா), காலஞ்சென்ற பிலிப் இராசநாயகம் மற்றும் திருமதி பத்மா றொபர்ட் (ஆஸ்திரேலியா), செல்வி யூலியானா (கனடா) ஆகியோரின் அன்பு சகோதரரும், ரூபா அன்ரனி, நளாயினி யூட் ஆகியோரின் அன்பு மாமனாரும், ருத், கசன்றா, மேரி, நிக்கோல், சந்தோஷ், அபிஷா, ஆகியோரின் அன்பு பேரனாரும், காலஞ் சென்றவர்களான செல்வராயன், மன்னவராயன், மெற்றில்டா மற்றும் திருமதி டெய்சி சவுந்தரநாயகம், குணரத்தினம், தனரத்தினம், தேவதாஸ் (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 13022013 புதன்கிழமை பி.ப 12.15 மணிக்கு மரியன் தேவாலயத்துக்கு (MARIEN KIRCHE (CHURCH ), MARIEN STR ,58452, WITTEN), எடுத்துச் செல்லப்பட்டு ஆத்மசாந்தித் திருப்பலியின் பின்னர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மரியன் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : வினிதா ஜெயகாந்த் (பெறாமகள்)
தொடர்புகளுக்கு
மனைவி – யாழ்ப்பாணம். , 4923029888731,
அன்ரனி, வினிதா – , 4167509916, 0212225610