இராமலிங்கம் பசுபதிப்பிள்ளை (R.P) – மரண அறிவித்தல்




pasupathipillaiபெயர் : இராமலிங்கம் பசுபதிப்பிள்ளை (R.P) – மரண அறிவித்தல்
பிறப்பு: –
இறப்பு: 2012-12-30
பிறந்த இடம் :புங்குடுதீவு
வாழ்ந்த இடம்: உருத்திரபுரம்
பிரசுரித்த திகதி: 2013-01-02

புங்குடுதீவு, 3ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் உருத்திரபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட எல்லோராலும் அன்பாக R.P என அழைக்கப்பட்ட இ.பசுபதிப்பிள்ளை 30.12.2012 அன்று இயற்கை யெய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் பொன்னாச்சி தம்பதியரின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற முருகேசு மற்றும் நல்லம்மா தம்பதியரின் பாசமிகு மருமகனும் பூரணத்தின் அன்புக் கணவரும், தேவரஞ்சிதா, கனகரஞ்சிதா, தெய்வேந்திரன், செல்வரஞ்சிதா, லோகரஞ்சிதா, யோகேந்திரன், சுரேந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், இராசமணி காலஞ்சென்ற பாக்கியம் மற்றும் பொன்னுத்துரை, சற்குணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், மனோன்மணி,இராமச்சந்திரன், குலசிங்கம், தனபாலசிங்கம், தர்மபாலன், இன்பநாதன், பத்மநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,நீக்கிலாஸ்,உதயகுமாரன்,நளினி, உதயகுமார் (ரஞ்சன்), மயூரதன், ஜெயலலிதா ஆகியோரின் அன்பு மாமனாரும் லோசாணி,டயானி, நிரோசா,உஜிதா,கோசலா,தருணிகா,தருணிகன், கோபிகன், பிருந்தன், பிரணவன், வைஷ்ணவி, பிரதீஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,கனகசுந்தரம் அவர்களின் தாய்வழி மருமகனும் காலஞ்சென்றவர்களான அம்பலவாணர், துரைராசா மற்றும் இரத்தின பூபதி, முத்துக்குமார் ஆகியோரின் மைத்துனரும், தம்பிஐயா, வசந்த கோகிலம், காலஞ்சென்ற ஞானசௌவுந்தரி மற்றும் குலநாயகி, மீனாம்பிகை, யோகராணி, திருத்தலாதேவி, சுகந்தினி ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (03.01.2013) வியாழக்கிழமை மு.ப. 10 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகள் உருத்திரபுரம் இந்து மயானத்தில் நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் எற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – இல.121,D 10, உருத்திரபுரம். , 0094 77 549 1557

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu