திரு செல்லையா அம்பலவாணர் மரண அறிவித்தல்




ampalavanarதிரு செல்லையா அம்பலவாணர் மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்லையா அம்பலவாணர் அவர்கள் 12-11-2014 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

சற்குணராஜா(பிரான்ஸ்), அன்னபூரணி(நெதர்லாந்து), தர்மாவதி(தர்மா- இலங்கை), ராஜட்ணம்(பாபு-பிரான்ஸ்), திருச்செல்வம்(சிறி- பிரான்ஸ்), தனலட்சுமி(பிரான்ஸ்), ஜெயகாந்தி(இலங்கை), கருணாவரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வாசுகி(பிரான்ஸ்), பாலசிங்கம்(பிரான்ஸ்), சாந்தநாயகி(பிரான்ஸ்), நிர்மலாதேவி(பிரான்ஸ்), சிங்கராஜா(நெதர்லாந்து), நாவ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அபிராம், சாயுரன், சரணியா, சகானா, பால்ராஜ், கிருசாந்தி, பாலவேணி, லோகன்ராஜ், சாருஜன், சஜிகா, அக்சயன், திவ்வியா, லசின், கபிதன், பரணி, சுரேஸ், சுஜான், தவித் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-11-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பி.ப 02:00 மணியளவில் சாவகச்சேரி குச்சப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 

தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
பாபு — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652006158
சற்குணம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33645618411
காந்தி — இலங்கை
செல்லிடப்பேசி: +94779626003
சிறி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652330257

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu