திரு கந்தையா சுந்தரராஜா மரண அறிவித்தல்
யாழ். காரைநகர் இடைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும், கொழும்பு கொள்ளுப்பிட்டியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சுந்தரராஜா அவர்கள் 12-11-2014 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, மனோன்மணி தம்பதிகளின் மூத்த புதல்வரும்,
ஜெயமதி அவர்களின் அன்புக் கணவரும்,
மதுசூதனன், சங்கீதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுந்தரரேஸ்வரி, காலஞ்சென்ற நட்ராஜா சீறிஸ்கந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 15-11-2014 சனிக்கிழமை அன்று காலை 8:00 மணிமுதல் 5:00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 16-11-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:30 மணியளவில் ஜெயரட்ண மலர்ச்சாலையில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மதியம் 12:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி
16B 1/1 ஆலொய் அவனியு,
கொள்ளுப்பிட்டி,
கொழும்பு.
தகவல்
பெறாமகன்
தொடர்புகளுக்கு
நடராஜா, செந்தில்குமார் — இலங்கை
செல்லிடப்பேசி: +94714118462