பெயர் : நேசராசா நேசமலர்
பிறப்பு :
இறப்பு : 2013-02-04
பிறந்த இடம் : கொக்குவில்
வாழ்ந்த இடம் : நல்லூர்
பிரசுரித்த திகதி : 2013-02-05
பொற்பதி வீதி, கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சிவன் புது வீதி , நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட நேசராசா நேசமலர் நேற்று (04.02.2013) திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற நேசராசாவின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான திருச்செல்வம் ஆனந்தம் தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து பார்வதி தம்பதியரின் மருமகளும் காலஞ்சென்ற ரமேஸ்குமார் மற்றும் சிந்துஜா (ஆசிரியர், யாழ்/ இந்து மகளிர் கல்லூரி), ரஜிக்குமார் (விற்பனை மேற்பார்வையாளர், எலிபன்ற் ஹவுஸ்), தனுஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஜெலீபன் (முகாமைத்துவ உதவியாளர், வலயக்கல்வி அலுவலகம், யாழ்ப்பாணம்.), றொனால்ட், கலிஸ்ரா ஆகியோரின் மாமியும், யுகராஜா, காலஞ்சென்ற பத்திநாதர் மற்றும் ஜேசுதாசன் (பிரதான முகாமையாளர், இலங்கை வங்கி, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்), ஞானமலர், லில்லிமலர் ஆகியோரின் சகோதரியும் காலஞ்சென்ற பத்மராசா மற்றும் நவமலர், புஸ்பமலர் ஆகியோரின் மைத்துனியும் விதுஷகான், ஜதுஷிகன் ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை இன்று (05.02.2013) செவ்வாய்க்கிழமை பி.ப.2.00 மணியளவில் நல்லூர் புனித ஆசீர்வாதப்பர் தேவாலயத்தில் (சென்.பெனடிக்ற்) நடைபெற்று பூதவுடல் நல்லடக்கத்திற்காக யாழ். கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலைக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் – 34, சிவன் புது வீதி, நல்லூர். , 021 568 8899 .