கதிராசிப்பிள்ளை முருகேசு – மரண அறிவித்தல்




Katiracippillai M.
பெயர் : கதிராசிப்பிள்ளை முருகேசு
பிறப்பு :
இறப்பு : 2013-02-03
பிறந்த இடம் : சுழிபுரம்
வாழ்ந்த இடம் : வட்டுக்கோட்டை
பிரசுரித்த திகதி : 2013-02-04

சுழிபுரத்தை பிறப்பிடமாகவும் வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட கதிராசிப்பிள்ளை முருகேசு நேற்று (03.02.2013) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான முருகேசு சிவகாமினி தம்பதியரின் அன்பு மகளும் காலஞ்சென்ற திரு.திருமதி. ராமலிங்கம் தம்பதியரின் மருமகளும் காலஞ்சென்ற முருகேசுவின் அன்பு மனைவியும் செல்வராசா, விஜயமாலா (லண்டன்), திருமகள் (பிரான்ஸ்), காலஞ்சென்ற கலைமகள் (உமா) ஆகியோரின் பாசமிகு தாயும் யோகேஸ்வரி, பாலசிங்கம் (லண்டன்), கோடீஸ்வரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியும் சின்னம்மா (அமெரிக்கா), காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை மற்றும் தேவராசா, பாலசிங்கம் ஆகியோரின் சகோதரியும் காலஞ்சென்ற வடிவேலு மற்றும் தவச்செல்வி, ரதிகுமாரி ஆகியோரின் மைத்துனியும் தனாரன் (கனடா), தார்மிகா, யதுசாயிரா சிவசுந்தரம், (S.S.சிறி), சுஜே (லண்டன்), கவிதா (லண்டன்), சுகிர்தா (பிரான்ஸ்), சுமித்தா (பிரான்ஸ்), சுவேதா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (04.02.2013) திங்கட்கிழமை முற்பகல் 10 மணியளவில் அவரது மகனின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக திருவடிநிலை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் – வட்டு தென்மேற்கு, வட்டுக்கோட்டை.

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu