திருமதி பாலசிங்கம் உதயகுமாரி [உதயம்] – ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி




uthayakumari-franceதிருமதி : பாலசிங்கம் உதயகுமாரி [உதயம்] அவர்களின் நீங்காத எம் நினைவலைகளின் 06 ஆம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்று

நீங்காத எம் நினைவலைகளின் ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் / திருமதி : பாலசிங்கம் உதயகுமாரி

தமிழீழ மண்னில் வரவு : 30-07-1953

அன்னிய மண்னில் உதிர்வு : 18-09-2008

தமிழீழம் – யாழ்ப்பாணம் / நல்லூரைப் பிறப்பிடமாகவும் – வாழ்விடமாகவும் – வதிவிடமாகவும், பிரான்ஸ், லிமோஸ் ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி : பாலசிங்கம் உதயகுமாரி [உதயம்] அவர்களின் நீங்காத எம் நினைவலைகளின் ஆறாம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.

* “அம்மா…தாயே உரிமையோடு உறவாடி – உரிமையோடு சண்டைகள் போட்ட எங்கள் அன்பில் ஏனோ சிலுவைகளின் சுமைகள்”…!!!

* “நீர் வற்றிப்போனாலும் சேற்றில் உயிர்வாழ்ந்து மீண்டும் புதுவாழ்வுக்காய் காத்திருக்கும் மீன்களைப் போல் – வாடிப்போன வாழ்க்கையிலும் வலிகளைச் சுமந்து செல்கின்றோம் அம்மா”…!!!

* “அவர் அவர் வாழ்க்கையின் போராட்டத்தில் யார்தான் குற்றவாளி என்று தெரியாமலே தண்டனை கிடைக்கின்றது தாயே”…!!!

* “தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் எம் அன்னையே உன் அன்பின் முன்னே”…!!!

* “அன்னை எனும் அற்புதப் பாத்திரம் இவ் அகிலத்தை விடவும் அதிகம் உயர்வானது – அன்னை என்று இவ் அகிலத்தில் உருவாகியதோ…அன்றே அன்பு என்னும் அதிசயமும் உருவானது”…!!!

* “அம்மா…தாயே எத்தனை…எத்தனையோ உறவுகள் எம்மைச் சுற்றி இருந்தாலும் – எம்மை நேசிக்கும் நீங்கள் எம்மோடு இல்லை எனில் நாம் எப்போதும் அனாதை தான் அம்மா”…!!!

* “இவ் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானடைந்து ஆண்டு ஆறு ஆனாலும் ஆறாது அம்மா உங்கள் பிரிவுத்துயர்”…!!!

* “தாயே…நிலையில்லா இவ் உலகில் நிலைத்திருக்கும் உங்கள் உறவால் நினைவிழக்க மாட்டாமல் நாம் நீந்துகின்றோம் கண்ணீரில்”…!!!

* “மரமிருக்கும் நாள்வரையில் நிழலிருக்கும் பூமியிது – நாமிருக்கும் நாள்வரையில் நீங்கள் இருப்பீர்கள் அம்மா எம் மனத்திரையில்”…!!!

* “அம்மா…தாயே நொடிப் பொழுதில் எம்மை நோக விட்டுச் சென்று விட்டீர்கள் ஆண்டுகள் நீளலாம் – ஆனால் உன் நினைவுகள் நீங்காது அம்மா”…!!!

* “தூங்காத வாழ்க்கை போன்று எம் தாயே துரத்துகிறது உன் நினைவுகள் – நீங்கள் பெற்ற எமக்கு பெருமை சேர்த்த எம் வற்றா நதியே உமைத் தாயாய்ப் பெற்றதால் நாம் பெருமை அடைந்தோம்”…!!!

* “எம் அன்னையே…நீ எமக்குக் கற்றுத்தந்து விட்டுக் கனதூரம் சென்று பல வாரம் ஆனாலும் அகலாது என்றும் உன் நினைவுகள்”…!!!

* “அன்பின் பிறப்பிடமே எம் தாயே…எம்மை அரவணைத்த எம் அம்மாவே – எம் தாயே…உம் அன்பை இழந்து ஆண்டுகள் பல சென்றாலும் மீண்டும் வருவாய் என தேடுகின்றோம்”…!!!

* “அம்மா…தாயே நீங்கள் இல்லாதபோதுதான் எமக்குப் புரிகின்றது நிஜமான இதயம் எப்படி என்று”…!!!

* “எம் தாயே…ஆண்டுகள் ஆறு ஓடிவிட்டாலும் ஆற்ற முடியாத துயரில் நாங்கள் இருக்கின்றோம் – தமிழ்த் தாயிடம் ஆறுதல் தேடித்…தேடி அலைகின்றோம் – தாய் நாடு விட்டு அன்னிய நாடுவந்து பின்பு ஒன்று சேர்ந்திருந்து நலமுடன் நாம் வாழ்ந்து வந்தோம் இடை நடுவினில் பறி போனது நம் வாழ்க்கை அம்மா”…!!!

* “அம்மா…தாயே நாம் நாதியற்று நின்ற வேளை நல்லவர் கெட்டவர் புரிந்துகொண்டோம் – அம்மா நீங்கள் இல்லாதபோதுதான் எமக்குப் புரிகின்றது நிஜமான இதயம் எப்படி என்று – எம் தாயே…அம்மா உங்கள் பிள்ளைகள் நால்வருக்கும் நீங்களும்…அப்பாவும் சூரியனுமாக நாம் சந்திரனுமாக இருந்தோமே – சூரியன் மறைந்துவிட்டால் சந்திரனுக்கு இருள்தான் வாழ்க்கை அம்மா”…!!!

* “எம் தாயே…நாங்கள் ஒரு இலட்சியத்தோடு வாழ்கின்றோம் ஆகவேதான் நாங்கள் இன்றும் நாங்களாகவே இருக்கின்றோம் அதனால்தான் நல்லவர்கள் மத்தியில் நன்மதிப்புடன் இருக்கின்றோம் அம்மா”…!!!

* “அம்மா…எங்களை உண்மையாக புரிந்தவர்களுக்கு எங்கள் செயலுக்கான விளக்கம் தேவையில்லை – ஏற்றிய தீபம் அணைந்துவிட்டதால் ஏழு ஜென்மத்திலும் அனுபவிக்கும் துன்பத்தினை ஏழு கடல் தாண்டி வந்து அனுபவிக்கின்றோம் – ஏற்றத்தாழ்வு இல்லாமல் எல்லோருடனும் பழகினோமே ஏன் என்று கேட்கக்கூட யாரும் இல்லாமல் ஏக்கத்துடன் எட்டாத படிகளைக் கடந்து ஏணிப்படிகளாக படிப்படியாக நாங்கள் இலட்சியத்தோடு வாழ்கின்றோம் ஆகவேதான் நாங்கள் இன்றும் நாங்களாகவே இருக்கின்றோம் எம் தாயே”…!!!

* “தலை காக்கும் தாய் எனும் தலைவி இல்லாவிட்டால் தலை நிமிர்ந்து நிற்கவிடாது இவ் உலகம் – இருந்தும் தரணியில் தன்நம்பிக்கையுடன் தலை நிமிர்ந்து வாழ்கின்றோம் அம்மா”…!!!

* “எம் தாயே…மனம் விட்டு பேசுவதற்கு நல்ல மனிதர்கள் இல்லை – மண்ணில் பிறப்பவர்கள் அனைவரும் மரணிக்கும் காலம் வரும் அப்போது மனிதர்களுக்கும் புரியும் எங்கள் மன வேதனை – மனிதர்கள் குறையுடையவர்கள் மட்டும் அல்ல மனிதர்கள் குறை காண்பர்களாகவும் ஆகிவிட்டார்கள்”…!!!

* “எம் அம்மா…வாடிய பூக்களை காணும் போது வாடிய உங்கள் பிள்ளைகள் எம் முகமே எமது கண் முன் தோன்றும் – வெளியில் எம் வேதனைகளைச் சொல்லமாட்டோம் – வெளிப்படையாக நாங்கள் நால்வரும் கதைக்கும் போது நம் மன வேதனைகளைச் சொல்வொம் தாயே – அப்போது எம் தமிழ்த் தாயை அருள் வேண்டி வேதனையைத் தீர்க்கின்றோம் அம்மா”…!!!

* “எமது கண்ணுக்கு கண்ணாக எம் இரு கண் விழிகளான அம்மாவே…அப்பாவே காற்றாக நீங்கள் இருந்து தமிழ்த் தாய் உருவில் காட்சிகள் தருகின்றீர்கள் – எம் கவலைகளைப் போக்குகின்றீர்கள் – மூச்சு நின்றால் தான் மரணம் இல்லை – நம்பிக்கையினாலும் தினம் தினம் மரணம் தான்”…!!!

* “எங்கள் அம்மாவே…அப்பாவே உங்கள் ஆசீர்வாதம் எப்போதும் எமக்குக் கிடைக்கும்”…!!!

* “வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானடைந்து ஆறு ஆண்டு ஆனாலும் ஆறாது தாயே…உங்கள் பிரிவுத்துயர்”…!!!

* “எம் அம்மா…நிலையில்லா இவ் உலகில் நிலைத்திருக்கும் உங்கள் உறவால் நினைவிழக்க மாட்டாமல் நாம் நீந்துகின்றோம் கண்ணீரில்”…!!!

* “எம் தாயே…மரமிருக்கும் நாள்வரையில் நிழலிருக்கும் பூமியிது – நாமிருக்கும் நாள்வரையில் நீங்கள் இருப்பீர்கள் அம்மா எம் மனத்திரையில்”…!!!

* “அம்மா…நொடிப் பொழுதில் எம்மை நோக விட்டுச் சென்று விட்டீர்கள் ஆண்டுகள் நீளலாம் – ஆனால் உன் நினைவுகள் நீங்காது எம் தாயே”…!!!

* “எம் தாயே…தூங்காத வாழ்க்கை போன்று துரத்துகிறது உன் நினைவுகள் – நீங்கள் பெற்ற எமக்கு பெருமை சேர்த்த எம் வற்றா நதியே உம்மை எம் அன்னையாய் பெற்றதால் நாம் பெருமை அடைந்தோம்”…!!!

* “எம் அன்னையே…நீ எமக்குக் கற்றுத்தந்து விட்டுக் கனதூரம் சென்று பல வாரம் ஆனாலும் அகலாது உன் நினைவுகள் அம்மா”…!!!

* “அன்பின் பிறப்பிடமே…எம்மை அரவணைத்த எம் தாயே…உம் அன்பை இழந்து ஆண்டுகள் பல சென்றாலும் மீண்டும் வருவாய் என தேடுகின்றோம் அன்னையே”…!!!

* “அன்னை…தந்தை எனும் அற்புதப் பாத்திரம் அகிலத்தை விடவும் அதிகம் உயர்வானது – அன்னை என்று அகிலத்தில் உருவாகியதோ…அன்றே அன்பு என்னும் அதிசயமும் உருவானது – எம் தந்தையே…எம் அன்னையே நீங்கள் என்றும் எங்கள் அதிசயம்”…!!!

* “எத்தனை…எத்தனையோ உறவுகள் எம்மைச் சுற்றி இருந்தாலும் – நாம் நேசிக்கும் உறவுகள் எம்மோடு இல்லை எனில் நாம் அனாதை தான்”…!!!

எம் தாயே…அம்மா உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல தமிழ்த் தாயை இதயபூர்வமாக தினம்…தினம் வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்.

அம்மா…உந்தன் இழப்பை ஈடுசெய்ய முடியாமல் உன் பிரிவால் வாடும் உங்கள் பிள்ளைகள், மருமகன், மருமகள்கள், பேரப்பிள்ளைகள்.

[லிமோஸ், பிரான்ஸ்]

தகவல் :

– உங்கள் மகன் : பா . உ . பாலா

தொடர்புகளுக்கு பிரான்ஸ் :

தொலைபேசி : (0033) 624662245

இடம் :

Mr. & Mrs. BALASINGAM
40 RUE DU MARECHAL JUIN
87100 LIMOGES
FRANCE

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu