இராசதுரை யோர்ஜ் எட்மன்(எட்மன்) – மரண அறிவித்தல்




Iracaturai yorj Edmond (Edmond)
பெயர் : இராசதுரை யோர்ஜ் எட்மன்(எட்மன்)
பிறப்பு :
இறப்பு : 2013-01-31
பிறந்த இடம் : சரவணை
வாழ்ந்த இடம் : நாரந்தனை
பிரசுரித்த திகதி : 2013-02-01

சரவணையை பிறப்பிடமாகவும், நாரந்தனையை வசிப்பிடமாகவும் கொண்ட இராசதுரை யோர்ஜ் எட்மன் நேற்று (31.01.2013) வியாழக்கிழமை காலமானர்.

அன்னார் ராகினியின் அன்புக் கணவரும், இராசதுரை காலஞ்சென்ற லூர்து தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பிலேந்திரன் மற்றும் திரேசா தம்பதியரின் அன்பு மருமகனும் ரஜனி (இத்தாலி), டயானா, பிரபா (இத்தாலி), பிரசாத் (பிரான்ஸ்), குயினா ஆகியோரின் அன்புத் தந்தையும், றூபினா (இத்தாலி), றொபேட் (ஜேர்மன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், அரியம் (இத்தாலி), வனஜா (ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனரும், அனிஸ்ரன (இத்தாலி), கண்ணன் ஆகியோரின் பாசமிகு மாமனும், ஐடா, யூடா, வண்ணக்கிளி, காலஞ் சென்றவர்களான பாபு, தனநாயகம் மற்றும் சோக்கன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க நிகழ்வு நாளை (02.02.2013) சனிக்கிழமை மு.ப.11.00 மணியளவில் புனித இராயப்பர் சின்னப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் நாரந்தனை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் – நாரந்தனை மேற்கு, ஊர்காவற்றுறை. , 0773606213
0774179389 –

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu