பெயர் :திருமதி செல்வராசா பவானி மரண அறிவித்தல்
பிறந்த இடம் :கைதடி
வாழ்ந்த இடம்: கைதடி
பிரசுரித்த திகதி: 2014-08-20
கைதடி தெற்கு, கைதடியைச் சேர்ந்த திருமதி பவானி செல்வராசா நேற்று (19.08.2014) செவ்வாய்க்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான குலசிங்கம் சிவயோகி தம்பதியரின் அன்பு மகளும், பிரபல புகையிலை வியாபாரி வல்லிபுரத்தின் (சுன்னாகம்) அன்பு மருமகளும், காலஞ்சென்றவர்களான தம்பு முத்து மாணிக்கம் தம்பதியரின் அன்பு மருமகளும், பிரபல புகையிலை வியாபாரி செல்வராசாவின் அன்பு மனைவியும், புவனேஸ்வரி, சிவநாதன், யோகநாதன், காலஞ்சென்றவர்களான தேவகி, தவச்செல்வி, விமலா ஆகியோரின் அன்பு சகோதரியும், யசோதா (லண்டன்), மயூரா (லண்டன்), மயூரன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயும், துசியந்தன் (லண்டன்), சிவராம கிருஷ்ணன் (லண்டன்) ஆகியோரின் மாமியும், விதுசிகா, உமேசா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (20.08.2014) புதன்கிழமை நண்பகல் 12 மணியளவில் கைதடி தெற்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக் கிரியைக்காக கைதடி ஊற்றல் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : த. செல்வராசா (கணவர்)
தொடர்புகளுக்கு
த. செல்வராசா (கணவர்) – ,