செல்வன் மகேந்திரம் சுகணன் – மரண அறிவித்தல்




suganan-germanyசெல்வன் மகேந்திரம் சுகணன் – மரண அறிவித்தல்

மலர்வு : 27 யூன் 1992 — உதிர்வு : 9 ஓகஸ்ட் 2014

ஜெர்மனி Müllheim ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரம் சுகணன் அவர்கள் 09-08-2014 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் இராசம்மா தம்பதிகள் மற்றும் காலஞ்சென்ற தனபாலசிங்கம் கனகம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

மகேந்திரன் ராகினி(ராதா) தம்பதிகளின் அருமைப் புதல்வரும்,

சுகன்ஜா, சரண்ஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

திருநாவுக்கரசு பாக்கியம்(இலங்கை), தவராசா இராசமணி(இலங்கை), இராசநாயகம் சிவசோதி(இ.போ.ச பரிசோதகர்-இலங்கை), பரமேஸ்வரன் மகாநதி(ஜெர்மனி), ரவிக்குமார் கமலரூபி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மருமகனும்,

இராஜேந்திரன் இராஜேஸ்வரி(ஜெர்மனி), காலஞ்சென்ற இராசநாயகி(இலங்கை), சிவனேஸ்வரன் இன்பேஸ்வரி(இலங்கை), இராஜேந்திரம் உதயகுமாரி(பிரான்ஸ்), செல்வகுமார் ரதிகுமாரி(கனடா) ஆகியோரின் அன்பு பெறாமகனும்,

யசிந்தா, மேனகா, ரேணுகா, சுவேதா, சாமினி, கௌதமி, தம்பா(இலங்கை), சன்ஜெயன், ஈழராம், சாய்ராம், சகிராம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுதர்சன்(ஜெர்மனி), சுமனன், சுகிர்தன், சுரேஷ், சுரேகா(இலங்கை), றதன், றகுணன், றாகுலன்(பிரான்ஸ்), ஐங்கரி(கனடா) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இதயம் ஒன்று நொறுங்கி உதிர்ந்து விழுந்து போனதடா
உன் கண்கள் மூடிய செய்தி எங்கள் காதுகளில் – விழுந்த பொழுது
சுகணன் என்ற வார்த்தையில் எத்தனை சுகங்களை கண்டோம்
இன்று நீ தூங்கிப் போனதால் அத்தனையும்
நொறுங்கிப் போனதே உன்னை பெற்றவளுக்கு

என்ன தான் ஆறுதல் கூறுவோம் உன்னை நினைத்துக் -கனவு
கண்ட உன் தந்தையை எப்படித்தான் தேற்றுவோம்
தம்பி என்று உன்மேல் உயிரையே வைத்த
உன் அக்காக்களுக்கு யாரடா ஆறுதல் சொல்ல முடியும்
உனக்கென்ன நீ – தூங்கிவிட்டாய்

உன் பாசத்தில் சிக்குண்ட உன் உறவுகளின்
உயிர்கள் தானே சிதைந்துவிட்டது நீ
இல்லா உலகத்தில் எல்லாமே
வெறுமையாக- போய்விட்டது ஐயா
உன்னை சுமந்து சென்றவன் யாரடா
அவனுக்கு என்ன தான் திமிரோ

இத்தனை உள்ளங்களையும் சாகடித்து
உன்னை அள்ளிச் செல்கின்றானே எங்களை
அழுது புலம்ப வைத்து உன்னை
அள்ளிச் சென்று விட்டானே
உன் புன்சிரிப்பில் மயங்கிவிட்டானா?
மறுபடியும் பிறந்துவா உன் அழகு முகம் காணவேண்டும்
அன்பு சுகணனே அன்பு சுகணனே
உன் ஆத்மா சாந்தி அடையட்டும்

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 13/08/2014, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Fohrmann KG Bestattungen, in Mühlheim an der Ruhr Feldstraße, 127 45476 Mülheim an der Ruhr Germany.
கிரியை
திகதி: வியாழக்கிழமை 14/08/2014, 01:00 பி.ப
முகவரி: Hauptfriedhof, Mülheim an der Ruhr Zeppelinstraße, 132 45470 Mülheim an der Ruhr Germany.

தொடர்புகளுக்கு
மகேந்திரன்(அப்பா) — ஜெர்மனி
தொலைபேசி: +492083017182
செல்லிடப்பேசி: +4915786120518
சுதன்(அண்ணா) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915789169506
இராசநாயகம்(மாமா) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776951288
இன்பேஸ்வரி(சித்தி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94212050760
இராசமணி — இலங்கை
செல்லிடப்பேசி: +94771234535

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu