திருமதி ஜெகதீஸ்வரி (கலா) நகுலேஸ்வரன் – மரண அறிவித்தல்




jegatheeswariதிருமதி ஜெகதீஸ்வரி (கலா) நகுலேஸ்வரன் – மரண அறிவித்தல்

இறப்பு – 2014-08-05
பிறந்த இடம்: மயிலிட்டி
வாழ்ந்த இடம்: உரும்பிராய்

மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் உரும்பிராய் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஜெகதீஸ்வரி நகுலேஸ்வரன் நேற்று (05.08.2014) செவ்வாய்க்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நடராசாதவமணி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சொர்க்கநாதன் நகுலேஸ்வரனின் அன்பு மனைவியும், சுபாசினி, லோஜன், ராஜன், உஷாயினி, சுயாந்தன் ஆகியோரின் அன்புத் தாயும், கண்ணன், மாலா, காந்தன், கௌரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (06.08.2014) புதன்கிழமை மு.ப 11.30 மணிக்கு நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக உரும்பிராய் ஒஸ்கா லேன் இளங்காடு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : பிள்ளைகள்.

தொடர்புகளுக்கு
பிள்ளைகள். – சிவகுல வீதி, உரும்பிராய் கிழக்கு

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu