வேலுப்பிள்ளை கனகக்கோன் – மரண அறிவித்தல்
இறப்பு – 2014-08-03
இடைக்காடு, தேத்தாவடியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கனகக்கோன் 03.08.2014 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை மற்றும் மங்களேஸ்வரி தம்பதியரின் அன்பு மகனும், கதிரி தம்பி, காலஞ்சென்ற செல்லபாக்கியம் தம்பதியரின் அன்பு மருமகனும், சிவமலரின் (ஆசிரியை, தர்மபுரம் இல.1 அ.த.க. பாடசாலை) அன்புக் கணவரும், கோகுலின் அன்பு தந்தையும், இளங்கோ, செங்கோ ஆகியோரின் பாசமிகு சகோதரனும், சுகந்தி, பொற்செல்வி, முத்துலக்சுமி, சிவயோக ராணி ஆகியோரின் மைத்துனரும், ஸ்ரீஸ்கந்தராஜா, இராஜசேகர் ஆகியோரின் சகலனும், தினேஸ், நிரோஸ், நிதோஸ், சேதன், பிரசாந், தனுஜா ஆகியோரின் சித்தப்பாவும், சிரோஜினி, நிஷாந் ஆகியோரின் பாட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (05.08.2011) செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் இடைக்காடு தேத்தாவடியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக இடைக்காடு சாமித்திடல் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் : இளங்கோ (சகோதரர்)(நில அளவையாளர்)
தொடர்புகளுக்கு
இளங்கோ (சகோதரர்)(நில அளவையாளர்) – தேத்தாவடி, இடைக்காடு, அச்சுவேலி. , 077 2189 973