பெயர் : திருமதி சற்குணராசா செல்வமலர் (ஆசிரியை, யாழ். இந்து மகளிர் கல்லூரி)
பிறப்பு :
இறப்பு : 2013-01-26
பிறந்த இடம் : காரைநகர்
வாழ்ந்த இடம் : கந்தர்மடம்
பிரசுரித்த திகதி : 2013-01-27
காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சற்குணராசா செல்வமலர் (ஆசிரியை யாழ். இந்து மகளிர் கல்லூரி) நேற்று (26.01.2013) சனிக்கிழமை காலமானார்.
அன்னார் சற்குனராசாவின் (உரிமை யாளர், மதுராமாளிகை) மனைவியும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி இராசம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தயாபரராசா இராசம்மா தம்பதியரின் அன்பு மருமகளும், செந்தூரன் (a/l. 2015, மாணவன், புனித பத்திரிசியார் கல்லூரி), அபிநயா (தரம் 9 மாணவி, வேம்படி மகளிர் கல்லூரி), ஆகியோரின் அன்புத் தாயும், காலஞ்சென்ற அருளானந்தசிவம் (ஆசிரியர்), மற்றும் நந்தகுமாரன் (கலைமகள் வர்த்தக நிலையம்), சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான கிருபாகரன், லோகானந்தசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், குமாரசாமி, தாரணி, ஐஸ்வர்யராணி, பேரம்பலம், சரோஜினிதேவி, துரைராச சிங்கம், அருள் ராசசிங்கம், விக்கினராசா, குவேந்திரராசா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (27.01.2013) ஞாயிற்றுக்கிழமை பி.ப. 2.00மணிக்கு அவரது இல்லத்தில் நடை பெற்று பூதவுடல் தகனத்துக்காக கோம் பயன் மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – 6 ஆம், ஒழுங்கை, No. 23, பலாலி வீதி, கந்தர்மடம் யாழ்ப்பாணம். , 021 321 9354