திரு செல்லையா சண்முகநாதன் மரண அறிவித்தல்
யாழ். தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சண்முகநாதன் அவர்கள் 14-06-2014 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசபை, மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தகௌரி அவர்களின் அன்புக் கணவரும்,
நிமால், நிசாந்தன், தாரணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற நவரத்தினம், கந்தசாமி, விஜயரத்தினம், மற்றும் இரத்தினதேவி, விமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சித்திரா, அர்ச்சனா, சங்கர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மதியாபரணம், கருணாகரன், மீனாம்பாள், தர்மராணி, சத்தியபாமா, பாலகௌரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற திருவேந்திரன் அவர்களின் அன்புச் சகலனும்,
ஹரினி, ஹரிகிருஷ்ணன், நிவேதன், ஹம்சி, அபிநீத்ரி, மஞ்சாரி, சாதுரி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-06-2014 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி
சார்லிமண்ட் வீதி,
வெள்ளவத்தை,
கொழும்பு- 06.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நிமால் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447976268041
நிசாந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447956286162
சங்கர் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777684630