திருமதி குணவதி தெய்வேந்திரம் மரண அறிவித்தல்




kunavathi-theiventhiramபெயர் :திருமதி குணவதி தெய்வேந்திரம் மரண அறிவித்தல்
பிறந்த இடம் :அரியாலை
வாழ்ந்த இடம்: அரியாலை
பிரசுரித்த திகதி: 2014-06-05

அரியாலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி குணவதி தெய்வேந்திரம் (ஓய்வுபெற்ற ஆசிரியர் அரியாலை கிழக்கு, அ.த.க.பாடசாலை) நேற்று முன்தினம் (03.06.2014) செவ்வாய்க்கிழமை காலமாகி விட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இராமப்பிள்ளை மரகதம் தம்பதியரின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் பாக்கியம் தம்பதியரின் மருமகளும், காலஞ்சென்ற தெய்வேந்திரத்தின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற சேதுராசா (கிராம உத்தியோகத்தர் தரம் ஐ) மற்றும் கமலவேணி (கிராம உத்தியோகத்தர் தரம் ஐ ஒ/62) றஞ்சினிதேவி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், சந்திரேஸ்வரி (ஓய்வுபெற்ற ஆசிரியை யா/கனகரத்தின மத்திய மகா வித்தியாலயம்), பேரின்பநாதன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும், நிருபரனின் அன்பு மாமியும் ஷகீஸ், ரதீஸ் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெரியதாயும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (05.06.2014) வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக அரியாலை சிந்துப்பாத்தி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu