தனரட்ணம் எட்வின் தனறோசான் மரண அறிவித்தல்




thanaratnam-advinபெயர் :தனரட்ணம் எட்வின் தனறோசான் மரண அறிவித்தல்
(எழுதுவினைஞர், புவிச்சரிதவியல் சுரங்கப் பணியகம், சுண்டுக்குளி)
பிறந்த இடம் :யாழ்ப்பாணம்
பிரசுரித்த திகதி: 2014-05-24

யாழ்ப்பாணம் 4ஆம் குறுக்குத் தெருவை பிறப்பிடமாகக் கொண்ட தனரட்ணம் எட்வின் தனறோசான் 23.05.2014 வெள்ளிக்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் N.R. தனரட்ணம் (இளைப்பாறிய சாலை முகாமையாளர் காரைநகர்) நித்தி யானந்தராணி தம்பதியரின் அன்பு மகனும், திருமதி தயாளினி சுரேந்திரன் (ஆசிரியை யா/புனித பெனடிக்ற் வித்தியாலயம்), ஜோ.தனரஞ்சன் (இலங்கை போக்குவரத்துச் சபைகோண்டாவில்) ஆகியோரின் அன்புச் சகோதரனும், பசில் சுரேந்திரன் (வவுனியா கச்சேரி), பிறேமமாலினி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இன்று (24.05.2014) சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு, ஏழாலை புனித இசிதோர் ஆலய சேமக் காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – , 021 222 3289

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu