பெயர் :வடிவேல் பழனிவேல் மரண அறிவித்தல்
பிறந்த இடம் :வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம்: வல்வெட்டித்துறை
பிரசுரித்த திகதி: 2014-04-27
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேல் மகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும் முன்னாள் ஆற்றுப்பள்ளத்தாக்கு அபிவிருத்திச்சபை காசாளரும் பின்னாள் சத்தியா பார்மசி உரிமையாளருமாகிய வடிவேல் பழனி வேல் நேற்று (26.04.2014) சனிக்கிழமை இறைபதம் எய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆதி நாராயணசாமி பங்கயஞ்செல்வம் தம்பதியரின் அன்பு மருமகனும், தங்கேஸ்வரியின் அன்புக் கணவரும், செல்வேந்திரா (இலங்கை), வசந்தி (டென் மார்க்), தனுஜா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சந்தியாப்பிள்ளை (டென்மார்க்), யோகசிறீதரன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், ரூபவதனா (ரமணி), செந்திவேல் (லண்டன்), ரகுபதி, சிறீபதி ஆகியோரின் அன்புச் சகோதரனும் நாகேஸ்வரி, காலஞ்சென்ற ஜெயச்சந்திரன், ஜெகதீஸ்வரி (லண்டன்), ராஜேஸ்வரி (ஆஸ்திரேலியா), மங்களேஸ்வரி (அதிபர், வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை), சுந்த ரேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும், பிலிப், மாவின், கெவின் (டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் நடை பெற்று, இன்று (27.04.2014) ஞாயிற்றுக்கிழமை மு.ப 10 மணியள வில் ஊரணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனஞ்செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
தகவல் : தங்கேஸ்வரி (மனைவி), தனுஜா (மகள்)
தொடர்புகளுக்கு
தங்கேஸ்வரி (மனைவி) – அ.மி. பாடசாலை ஒழுங்கை, வல்வெட்டித்துறை. , 021 205 5376
தனுஜா (மகள்) – – , 0044 7800931697