பெயர் :திருமதி திருஞானம் கந்தவனம் (ஓய்வுபெற்ற அதிபர்) மரண அறிவித்தல்
பிறந்த இடம் :விளான்
வாழ்ந்த இடம்: கோண்டாவில்
பிரசுரித்த திகதி: 2014-04-10
வறுத்தலை விளானைப் பிறப்பிடமாகவும் முத்தட்டுமட வீதி கோண்டாவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி திருஞானம் கந்தவனம் நேற்று 09.04.2014 புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற அப்பாக்குட்டி (விதானையார்), பிள்ளையம்மா தம்பதியரின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற தம்பிமுத்து சீதேவி (ஏழாலை வடக்கு) தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ் சென்ற கந்தவனத்தின் (ஓய்வுபெற்ற அதிபர்) அன்பு மனைவியும், திருமதி சிவக்கொழுந்து, தம்பிராசா (ஆஸ்திரேலியா), காலஞ்சென்ற திருமதி அற்புதம் செல்வமாணிக்கம் ஆகியோரின் அன்புச் சகோதரி யும், காலஞ்சென்ற சிவப்பிரகாசம் மற்றும் கண்மணி, செல்வரட் ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், திருமதி அமிர்தகௌரி, இரஞ்சன் (பிரான்ஸ்), கண்ணன் (ஆசிரியர்கொழும்பு), திருமதி அருணா (லண்டன்), திருமதி ஜெயகௌரி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயும், தங்கராசா (ஓய்வூதியர்) விமலாதேவி (பிரான்ஸ்), சுகுணா (ஆசிரியைகொழும்பு), ராமச் சந்திரன் (லண்டன்), தர்மலிங்கம் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியும், சஞ்சுதன் (லண்டன்), சஞ்சுத்தா, அனித்திரா (பிரான்ஸ்), ஆகாஷ் (பிரான்ஸ்), கிரிசிகேசன் (கொழும்பு), சஜீவ் (கொழும்பு), அருண்றாம் (லண்டன்), அபிராம் (லண்டன்) அபினயா (லண்டன்) கவீன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னரின் இறுதிக்கிரியைகள் இன்று (10.04.2014) வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் காரைக்கால் இந்து மயானத் தில் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் : வை. தங்கராசா (மருமகன்).
தொடர்புகளுக்கு
வை. தங்கராசா (மருமகன்).