திருமதி பராசக்தி கனகசபை மரண அறிவித்தல்




parashkthi-kanagasabai

பெயர் :திருமதி பராசக்தி கனகசபை மரண அறிவித்தல்
பிறந்த இடம் :புங்குடுதீவு
வாழ்ந்த இடம்: யாழ்ப்பாணம்
பிரசுரித்த திகதி: 2014-03-21

புங்குடுதீவு 3ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் 182 கச்சேரி நல்லூர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பராசக்தி கனகசபை (புங்குடுதீவு வித்துவான் பொன். சு. கனகசபை அவர்களின் மனைவி பராசக்தி)நேற்று (19.03.2014) காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி யோகாம்பிகை தம்பதியரின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் கற்பகம் தம்பதியரின் அருமை மருமகளும் காலஞ்சென்ற வித்துவான் பொன். அ. கனகசபை (ஓய்வு பெற்ற அதிபர்) இன் அன்புமனைவியும் கமலாஜினி, கலைச்செல்வி (ஓய்வு பெற்ற லிகிதர் கச்சேரி கிளிநொச்சி) காலஞ்சென்ற காந்திஅழகன் (இலங்கை வங்கி) மற்றும் சத்தியதேவி (மாவட்ட நீதிமன்றம் யாழ்ப்பாணம்), அருள்அரசி (விலை மதிப்பீட்டு திணைக்களம் யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தாயும் சிவதாசபிள்ளை (ஓய்வுநிலை தபாலதிபர்), பாலசுப்பிரமணியம் (உருத்திரபுரம் சேவிசர்), ஜெயராணி (கொழும்பு), மகாதேவன் (பிரான்ஸ்), குலசேகரம் (புங்குடுதீவு மகாவித்தியாலயம்) ஆகியோரின் அன்புமாமியும் காலஞ்சென்ற தினேஸ்குமார் மற்றும் Dr. மதிவதனன் (யாழ். போதனா வைத்தியசாலை), மாலினி (பிரதேச செயலகம் பூநகரி) காலஞ்சென்ற சேயோன் மற்றும் ஜனகன் (பிரான்ஸ்), சங்கீதா, பிரசாத் (லண்டன்), ஸ்ரீசனாத் (லண்டன்), பங்கஜன் (கொழும்பு), அனுஜன் (கனடா), பிரணவன், பிரசோபன், பானுஜன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் வைஷாலி, அபிஷனா, வைஸ்ணவி, கௌத்தமி, வினுஸ், அஸ்வின் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (20.03.2014) வியாழக்கிழமை பி.ப. 4 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் செம்மணி இந்து மயானத்துக்கு தகனக்கிரியைக்காக எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – 182 கச்சேரி நல்லூர் வீதி, யாழ்ப்பாணம். , 021 2229449

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu