திரு இராமலிங்கம் சந்திரசேகரன் மரண அறிவித்தல்




ramalingam-chandrasegaran2

திரு இராமலிங்கம் சந்திரசேகரன் மரண அறிவித்தல்

யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், பெரியபளையை வதிவிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்கள் 14-03-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் அன்னம்மா(கைதடி) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கமுத்து(பெரியபளை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

சாந்தி, தர்சினி, பாமினி(கனடா), சுதர்சினி, கோகுலதாஸ்(கோகுலன்- Sam Real Estate- Montreal) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சபாபதிப்பிள்ளை(கனடா), சிறினிவாசன்(வாசு- கைதடி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கணேசமூர்த்தி, சிற்றம்பலம், இராசலக்‌ஷிமி(வபா- கனடா), சரஸ்வதி(இலங்கை), குலம், கிருபா, கனகா, அன்னலக்‌ஷிமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பாலமுரளி(முரளி), செல்வராசா(செல்வம்), சபேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சரன், சாருஜன், சேரன், சிந்து, சயே ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கோகுலன் — கனடா
தொலைபேசி: +15146859420
செல்லிடப்பேசி: +15149476457
சாந்தி முரளி — கனடா
தொலைபேசி: +14165609472
தர்சினி செல்வம் — கனடா
தொலைபேசி: +14167591408
பாமினி சபேசன் — கனடா
தொலைபேசி: +14168609864

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu