திரு ஜோசைராசா ஒஸ்மண்ட் தேவதாசன் – மரண அறிவித்தல்




யாழ். ஊர்காவற்றுறை மண்குழி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசைராசா ஒஸ்மண்ட் தேவதாசன் அவர்கள் 01-07-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைமுத்து ஜோசைராசா திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,கெலன் தேவதாஸ்(கனடா), ஜோண் பப்ரிஸ்ற்(கனடா), இம்மாக்குளேற், கார்மல், மேர்சி(ஆசிரியை- கரம்பொன் சண்முகநாதன் மகா வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,யூட் தேவதாஸ்(கனடா), பப்ரிஸ்ற் பெலின்டா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,அன்று ரியூடர் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

செபனியா, செஸ்வின் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 03-07-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு மு.ப 09:45 மணியளவில் புனித சூசையப்பர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித அந்தோனியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu