திருமதி ஆறுமுகம் தங்கம்மா – மரண அறிவித்தல்




யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், பம்பலப்பிட்டியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தங்கம்மா அவர்கள் 28-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ராமனாதர் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வீரவாகு கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,திலோத்தமை(திலகம்- கொழும்பு), கௌரி(ஜேர்மனி), கனகேஸ்வரி(சுவிஸ்), உதயகுமார்(கொழும்பு- ABI Fashion World Jaffna, ABI TRADERS COLOMBO- உரிமையாளர்), சோதிஸ்வரி(டென்மார்க்), காலஞ்சென்ற சந்திரகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற சின்னத்துரை மற்றும் தெய்வேந்திரம், நமநாதன், மஞ்சுளா, ராஜேந்திரன் ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம், மருதலிங்கம், காமாட்சி மற்றும் கமலாம்பிகை(புங்குடுதீவு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான கதிர்காமு ஐயாத்த பிள்ளை, தவராசா, சிவகுரு மற்றும் முருகையா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் மைத்துனியும்,நந்திவர்மன்(ஈசன்), நந்தினி(சக்தி), யசோதா(துளசி), காலஞ்சென்ற சுபாசினி, கவிதா, சஞ்சீப், சந்துரு, பவ்யா, கிஷோக்(Alpna Pvt Ltd), யஷோக், அபிஷோக், ஜனார்தன், துளசிகா, சோபிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,பிரியத், யசிந்த், மேர்வின், அபினயா, அபிசனா, அக்சயன், கிசோன், திசோன், ரிசானா, நிலக்ஷா, யர்சிக்கா, அனோஸ்கா, அனன்யா, வேதா, ஜசாரா, ஜதன், சியாரா, சல்மான், அபிதேவ், ஆருஸ், லோகன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 30-03-2023 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 2A,
டி பொன்சேகா பிளேஸ்,
பம்பலப்பிட்டி,
கொழும்பு.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
உதயகுமார் – மகன்Contact Request Details

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu