பெயர் :திருமதி சத்தியரஞ்சிதம் சந்திரசேகரி மரண அறிவித்தல்
பிறந்த இடம் :கோண்டாவில்
வாழ்ந்த இடம்: கோண்டாவில்
இறப்பு:2014-02-27
பிரசுரித்த திகதி: 2014-03-01
கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், துவாரகை வீதி, கோண்டாவில் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சத்தியரஞ்சிதம் சந்திரசேகரி (ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியை பதுளை தமிழ் ம.வி, பதுளை சரஸ்வதி கனிஸ்ட வித்தியாலயம், கொக்குவில் ஞானபண்டிதா வித்தியாசாலை) 27.02.2014 வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லப்பா பாக்கியம் தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா வள்ளிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற ஓய்வுநிலை அதிபர் பொன்னையா சந்திரசேகரியின் அருமை மனைவியும், சத்தியராணி, காலஞ்சென்ற சத்தியலீலா, சத்தியவதி, மகாலிங்கசிவம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், பாலகௌரி, பாலச்சந்திரன், பாலேஸ்வரி, சந்திரபாலன், பாலரஞ்சினி ஆகியோரின் பாசமிகு தாயாரும், மகேஸ்வரமூர்த்தி, சறோஜாதேவி, லோறன்ஸ், நந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமியும், சுபாஷன், சாமந்தி, ஷாருகி, நிறாஞ்சன், அபிநயன், நிஷாந்த், யதுர்ஷன், பிரணவி, லினுஷா, கவிதரன், ஷாருகா, தர்ஷிகா ஆகியோரின் அருமைப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (02.03.2014) ஞாயிற்றுக்கிழமை மு.ப.10.00 மணிக்கு இடம்பெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக கோண்டாவில் இந்துமயானத்திற்கு (டிப்போ அருகில்) எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – துவாரகை வீதி, கோண்டாவில் வடக்கு, கோண்டாவில். , 021 490 2960