திருமதி தியாகராசா தங்கம்மா – மரண அறிவித்தல்




யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 7ஆம் வட்டாரம், கிளிநொச்சி இராமநாதபுரம் 7 ஆம் யூனிற், மற்றும் கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது கிளிநொச்சி ஆனந்தபுரத்தினை வதிவிடமாகவும் கொண்ட தியாகராசா தங்கம்மா அவர்கள் 22-02-2023 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சேதுப்பிள்ளை தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற தியாகராசா(ஓய்வுநிலை அதிபர்- யாழ்/புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, சண்முகம், பூபதி மற்றும் நவரட்ணம்(கல்மடுநகர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஐஸ்வரி, சுந்தராம்பாள், புஸ்பவதி மற்றும் காலஞ்சென்ற தர்மலிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,கலையரசி(ஓய்வுநிலைப் பிரதி அதிபர்- கிளி/மத்திய ஆரம்ப வித்தியாலயம்), பத்மகாந்தன்(சுவிஸ்), காலஞ்சென்ற கலைச்செல்வி(கனடா), கலைவதனி(இளங்கணக்கியல் பட்டதாரி- வவுனியா வளாகம்- யாழ் பல்கலைக்கழகம்- கனடா), பிரேமகாந்தன்(ஆசிரியர்- கிளி/முரசுமோட்டை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற செல்வராசா(ஓய்வுநிலைப் பிரதி கல்விப்பணிப்பாளர்- கிளிநொச்சி வலயம்), ஜெயகௌரி(சுவிஸ்), லோகநாதன்(கனடா), தர்மராசா (பொறியியலாளர்- கனடா), ஸஜனி(ஆசிரியர் – கிளி/இராமநாதபுரம் கிழக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

தர்ஷிகா(அபிவிருத்தி உத்தியோகத்தர்- பிரதேச செயலகம் வலிகாமம் வடக்கு), கிருஷிகன்(பல் வைத்திய நிபுணர்- மன்னார்), தஜிவன்(பொறியியலாளர்- சிங்கப்பூர்), ஹோபிகா(ஆசிரியர்- பரந்தன் இந்து மகாவித்தியாலயம்), மேனுஷா(கதிரியக்கவியலாளர்- சுவிஸ்), துஷானா(கணக்காளர்- கனடா), கதுர்ஷன்(பொறியியலாளர்- கனடா), தமிஷா (கனடா), யனுஷ் (கனடா), நூதனன் (கனடா), கவிநயன், கபிலன்(சிரேஸ்ட விரிவுரையாளர்- யாழ் பல்கலைக்கழகம்), கௌசிகா(பல்வைத்திய நிபுணர்- கிளிநொச்சி), துஷாத்(பொறியியலாளர்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,பிரமாத்மிகா, விஸ்வாத்மிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 24-02-2023 வெள்ளிக்கிழமை அன்று இல- 441, ஆனந்தபுரம் கிழக்கு, கிளிநொச்சியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று மு.ப 11.30 மணியளவில் இராமநாதபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர்Mobile : +94212285086Phone : +94777789879

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu