திருமதி நவரட்ணம் பற்றிமா றோஸ் – மரண அறிவித்தல்




திருமதி நவரட்ணம் பற்றிமா றோஸ்

மன்னார் நறுவிலிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், மன்னார் குழந்தையேசு புரத்தை வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணம் பற்றிமா றோஸ் அவர்கள் 04-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கவிஞர். மொத்தம் போல்(தலைமை ஆசிரியர், சூரியகட்டைக்காடு, மன்னார்) போல் ஆனாப்பிள்ளை தம்பதிகளின் மூத்த அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அந்தோனி பேதிரு, விக்ரோறியா தம்பதிகளின் அன்பு மருமகளும்,நவரட்ணம் யோசப்(துரை) அவர்களின் பாசமிகு மனைவியும்,

அமலநாத்(றெஜினோல்ட்), ஜெகப்பிரியன்(ஜெகன்-லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,மரிய மீரா, டயனா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,ரதீசன், பிறிட்டனி, கெயிடன்(லண்டன்), ஜொசித்தா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,கரன் போல்(லண்டன்), மலர், காலஞ்சென்ற கிறேஸ், கிருபா, அருட்பணி. பீற்றர் மனோகர்(ஆயர் இல்லம், மன்னார்), யோகா, றூபி(லண்டன்), காலஞ்சென்ற விக்ரர் விஜயதேவா (யோகி), சுகி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,மாற போல்(லண்டன்), பாலசிங்கம், செபம், யோகம், காலஞ்சென்ற அருட்திரு சாம் அரசரட்ணம், லூக்(லண்டன்), சிவேந்திரா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான மரிசால், செபமாலை, குணம் மற்றும் ஆசை ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.அன்னாரின் இறுதி ஆராதனை 07-12-2022 புதன்கிழமை அன்று பி.ப 02.00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு மன்னார் குழந்தை யேசு கோவில் வழிபாட்டுடன் அதனைத் தொடர்ந்து மன்னார் புனித செபஸ்த்தியார் பேராலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, வங்காலை சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கரன் போல் – சகோதரன்Mobile : +447960719162Phone : +442085512592
ஜெகப்பிரியன் (ஜெகன்) – மகன்Mobile : +447814551421
அருட்பணி. பீற்றர் மனோகர் – சகோதரன்Mobile : +94773606460
றெஜினோல்ட் – மகன்Mobile : +94766967602

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu