திரு கந்தையா நாகராசா – மரண அறிவித்தல்




திரு கந்தையா நாகராசா

யாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், இணுவில் மேற்கு கே.கே.எஸ் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நாகராசா அவர்கள் 06-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா, தங்கம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், நடராசா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,யோகராணி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற தர்மலிங்கம், கனகசபாபதி, சிவசுப்பிரமணியம், சிவநாதன், சிவஞானம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,பூலோகராணி, ஜெகதாம்பாள், தனநாயகி, தியாகேஸ்வரி, உமாபதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

உதயகுமார், செல்வகுமார், சந்திரகலா(ஆசிரியர். யா/இணுவில் மத்திய கல்லூரி), கலாறஜனி(முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், வலிகாமம் வலயக்கல்வி அலுவலகம்), யோகேஸ்வரி(லண்டன்), கமலலோஜினி(ஆசிரியை. யா/மத்திய கல்லூரி), சுகந்தி(உதவிமுகாமையாளர், இலங்கை வங்கி, வட பிராந்திய அலுவலகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அஜிதா(ஆசிரியை. யா/கோண்டாவில் இந்துக் கல்லூரி), ஞானேஸ்வரி, சத்தியநேசன், பாலசுப்பிரமணியம்(முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர். வலி.மேற்கு பிரதேசசபை), அருட்செல்வன்(லண்டன்), கோபீஸகன்(வேலை மேற்பார்வையாளர். யாழ் மாநகரசபை), ஜெயச்சந்திரன்(தொழில்நுட்ப உத்தியோகத்தர், மருத்துவ பீடம். யாழ்.பல்கலைக்கழகம்) ஆகியோரின் மாமனாரும்,

கலாத்மிகா, சந்தோஷ், விகஷினி, கேசிகன், சிவனுஜன், நவீன், சயனிகா, விசாகன், விகாஷ், காருண்ஜா, பிரணாத், தஷ்விகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 07-11-2022 திங்கட்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனக்கிரியைக்காக பூவோடை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சுகந்தி ஜெயச்சந்திரன் – மகள்Mobile : +94778160700

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu