திருமதி ஜெயலட்சுமி தருமகுலசிங்கம் – மரண அறிவித்தல்




திருமதி ஜெயலட்சுமி தருமகுலசிங்கம்

யாழ். காரைநகரைப் பூர்வீகமாகவும், நீர்கொழும்பு கொச்சிக்கடையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஜெயலட்சுமி தருமகுலசிங்கம் அவர்கள் 02-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு கனகம்மா(முன்னாள் ஸ்ரீமுருகன் அரிசி ஆலை- கிளிநொச்சி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,தருமகுலசிங்கம் (உரிமையாளர் பவித்திரா கோல்ட் ஹவுஸ்- கொச்சிக்கடை) அவர்களின் அன்பு மனைவியும்,

பவித்திரா(கனடா), விசுவதன், உபேந்திரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,அருண்ரஜீதரன்(கனடா) அவர்களின் அன்பு மாமியும்,ஆருத், சர்வேஷ், ஹிமேஷ் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,விஜயலட்சுமி, காலஞ்சென்ற அமிர்தலிங்கம், தனலட்சுமி(S.K.T சுவிஸ்), செல்வலட்சுமி(பிரான்ஸ்), குணலிங்கம்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ஜெகதீஸ்வரி கமலநாதன்(ஜெகம் நகையகம்- கிளிநொச்சி), புஸ்பராணி(ஆசிரியை- பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி), திருஞானசம்பந்தன்(ஓய்வுபெற்ற ஆசிரியர்), யோகேஸ்வரன்(ஜெனுயின் மோட்டர்ஸ் -யாழ்ப்பாணம்), நந்தினி, காலஞ்சென்ற கணேஷ்குமார், சந்தனலட்சுமி, கதிர்காமநாதன்(S.K.T சுவிஸ்), குழந்தைவேல், ரமணி(பிரான்ஸ்), ராதா கெளரி(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 06-10-2022 வியாழக்கிழமை அன்று 101/2, பள்ளஞ்சேனை, கொச்சிக்கடை எனும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 09-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் நீர்கொழும்பு மஞ்ஞொக்க பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: கணவர், மக்கள், சகோதரர்கள், மைத்துனர்கள்

தொடர்புகளுக்கு
தருமகுலசிங்கம் – கணவர்Mobile : +94775731881

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu