திரு சுப்பிரமணியம் ஸ்ரீஸ்கந்தராஜா
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி பலாலி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் 21-09-2022 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சின்னம்மா தம்பதிகளின் மருமகனும்,சந்திராவதி அவர்களின் அன்புக் கணவரும்,லுஷாந்தி அவர்களின் பாசமிகு தந்தையும்,தருமராசா அவர்களின் அன்பு மாமனாரும்,சரோஜாதேவி(பிரான்ஸ்), விஜயகுமாரன்(நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்), சாந்தகுமார்(கனடா) ஆகியோரின் சகோதரரும்,
இராஜலட்சுமி, காலஞ்சென்ற இராமச்சந்திரன், இராமகிருஷ்ணன்(பிரான்ஸ்), சச்சிதானந்தம்(கனடா) திரவியநாயகம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,திவ்யா, தீபக் ஆகியோரின் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 25-09-2022 ஞாயிற்றுக்கிழமை மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
இல. 119/9 முன் ஒழுங்கை(Front Lane),
பலாலி வீதி,
திருநெல்வேலி.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர்Mobile : +94766757654