திருமதி கௌரிதேவி வரதன் – மரண அறிவித்தல்




Kauritevi-Varadhanபெயர் : திருமதி கௌரிதேவி வரதன் (கௌரி)
பிறப்பு : –
இறப்பு : 2013-01-13
பிறந்த இடம் : தெல்லிப்பழை
வாழ்ந்த இடம் : லண்டன்
பிரசுரித்த திகதி : 2013-01-19

தெல்லிப்பழை வீமன்காமம் வடக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் கீறீன்போர்ட்டை (Greenford, Middle sex) வசிப்பிடமாகவும் கொண்ட கௌரிதேவி வரதன் (கௌரி) 13.01.2013 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி செல்லத்துரை (புன்னாலைக்கட்டுவன்) மற்றும் மெல்போர்ன் அவுஸ் திரேலியாவில் வசிக்கும் மனோன்மணி (வீமன்காமம் வடக்கு, தெல்லிப்பழை) தம்பதியரின் கனிஷ்ட புத்திரியும், அவுஸ்.சிட்னியில் வசிக்கும் தம்பையா தியாகராசா (இணுவில்) காலஞ்சென்ற தங்கம்மா (உரும்பிராய்) தம்பதியரின் அன்பு மரு மகளும், வரதன் அவர்களின் அன்பு மனைவியும், சறோயினிதேவி (மெல்போர்ன்), சாந்தாதேவி (மினசோட்ரா, அமெரிக்கா), உஷாதேவி (மினசோட்ரா, அமெரிக்கா), வசந்தாதேவி(சிட்னி) ஆகியோரின் அன்புச் சகோதரியும், தயாளினி, சிவச்சந்திரன் (சிட்னி), தயாளன், கல்யாணி (நியூஜெசி, அமெரிக்கா), சிவனேசன் (மெல்போர்ன்), இராஜலிங்கம் (மினசோட்ரா, அமெரிக்கா), பாலசுப்பிரமணியம் (இலங்கை), விஜயகுமார்(சிட்னி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20.01.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 முதல் 5 Courthope Road, Greenford, Middlesex UB6 8PZ இல் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, அதன் பின்னர் தகனக்கிரியைகள் 11.30 முதல் St Marylebone Crematorium, East End Road, London N2 ORZ இல் அமைந்துள்ள மயானத்தில் நடைபெறும்.

குறிப்பு: அன்றைய தினம் நாளை (20.01.2013) காலை 9.30 மணிக்கு இணுவில் பரராஜ சேகரப்பிள்ளையார் ஆலய தெற்கு வீதியில் உள்ள அன்னாரின் சகோதரன் க.கோடீஸ்வரன் இல்லத்தில் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை இடம்பெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தொடர்பு: Srirangan 004478 5212 1049

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்.

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu