பெயர் : திருமதி சூசைப்பிள்ளை நட்சத்திரம்
பிறப்பு : –
இறப்பு : 2013-01-17
பிறந்த இடம் : இளவாலை
வாழ்ந்த இடம் : இளவாலை
பிரசுரித்த திகதி : 2013-02-02
இளவாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சூசைப்பிள்ளை நட்சத்திரம் கடந்த 17.01.2013 வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பீட்டர்சூசானம் தம்பதியரின் அன்பு மகளும் காலஞ்சென்ற சூசைப்பிள்ளையின் அன்பு மனைவியும், மனுவவேல்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும், குளோரியா (பபிஜேர்மனி), பீட்டர் இம்மானுவேல் (ஜேர்மனி), காலஞ்சென்ற யூலியட் (பவா) மற்றும் கலா (லண்டன்), பேசி (கனடா), கொன்சி (லண்டன்), சூட்டி (ஜேர்மனி), மொரின் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு தாயாரும் ஜோர்ஜ் (ஜேர்மனி), அன்ரா (ஜேர்மனி), காலஞ்சென்ற ஸ்ரீபன், எமில் (லண்டன்), ரதி (கனடா), மைக்கல்ராஜன் (லண்டன்), சகிலா (ஜேர்மனி), அன்ரன் குமார் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியும் காலஞ்சென்ற அன்னம்மா மற்றும் றோசலீன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், எல்வீரா, யோகானா, யோன்கரிசன், மரின்கரிசினி, மரின் உஷாலினி, மரின் திரோசினி, எல்வீனா, எதிரா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனைகள் நாளை (22.01.2013) செவ்வாய்க் கிழமை மு.ப 9.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் இளவாலை புனித அன்னாள் ஆலயத்ததுக்கு எடுத்துச் செல்லப்பட்டு திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு இளவாலை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – பீற்றர் வளவு இளவாலை.