திரு பொன்னையா நற்குணநாதன் – மரண அறிவித்தல்




திரு பொன்னையா நற்குணநாதன்
மலர்வு 10 FEB 1950 உதிர்வு 28 DEC 2021

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Ikast ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா நற்குணநாதன் அவர்கள் 28-12-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், உரும்பிராயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னையா அருளம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ஆவரங்காலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பாலகிருஷ்ணன் ஸ்ரீமகா யோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அர்ச்சனா, தயாளினி, பிரியந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்புச் சகோதரரும்,உதயகுமாரி அவர்களின் அன்பு மைத்துனரும்,

கமலதாஸ், சஜீபன், ரிஷிகேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிவேதிகா, நிகாஸ், சச்சின், சஞ்சய், ஜானகி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

குகேந்திரன், நிசாந்தன், கிருபாஜினி, பிரியதர்ஷினி, யதுர்ஷன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சாந்தினி – மனைவிMobile : +4541121345
கமலதாஸ் – மருமகன்Mobile : +4561160191
சஜீபன் – மருமகன்Mobile : +4560191393
ரிஷிகேசன் – மருமகன்Mobile : +4550707454

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu