திருமதி இரத்தினசாமி மாதவிப்பிள்ளை – மரண அறிவித்தல்




திருமதி இரத்தினசாமி மாதவிப்பிள்ளை
பிறப்பு 14 JUL 1927 இறப்பு 08 SEP 2021

யாழ். வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை சாம்பல்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசாமி மாதவிப்பிள்ளை அவர்கள் 08-09-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து அன்னக்கண்டு தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பையா, பொன்னி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இரத்தினசாமி(புகையிரத நிலைய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற செல்லகண்டு, சாமிஅப்பா, செல்லத்துரையப்பா, பாலையப்பா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஞானாம்பிகை(பபா), கமலாம்பிகை(பபி- முன்னாள் ஆசிரியை), லலிதாம்பிகை(ரூபி), கௌசலாம்பிகை(பேபி- மருத்துவர்), சுரேஸ்(முன்னாள் ஆசிரியர்), சபேசன், மகேசன், அமுதாம்பிகை(நகராட்சிமன்ற அலுவலர்), ரமேஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சித்திரவேலாயுதம், ராஜக்கோன் மற்றும் ஞானகுணாளன்(மருத்துவர்), காலஞ்சென்ற இந்திராணி, கலாநிதி, ரமணி, சிவபாலசுந்தரம், கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுதாகர், கரிகரன், மயூரன், ரோசான்(மருத்துவர்), அபிநயன், சாமினி, பிரியங்கன், பிருந்தாபன், டிவ்யானி, சங்கீதா(மருத்துவர்), நிசா, மயூரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 10-09-2021 வெள்ளிக்கிழமை அன்று பி:ப 03:00 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சுரேஸ் – மகன்Mobile : +94775109591
சபேசன் – மகன்Mobile : +447956847333
கமலாம்பிகை – மகள்Mobile : +94773912927
லலிதாம்பிகை – மகள்Mobile : +94262051066

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu