திருமதி இரத்தினபூபதி தெய்வேந்திரம்பிள்ளை – மரண அறிவித்தல்




திருமதி இரத்தினபூபதி தெய்வேந்திரம்பிள்ளை
பிறப்பு 03 JAN 1931 இறப்பு 24 AUG 2021

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் தலையாழி, கனடா டொரோன்டோ, அவுஸ்திரேலியா சிட்னி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினபூபதி தெய்வேந்திரம்பிள்ளை அவர்கள் 24-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிட்னியில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிதம்பரம்பிள்ளை, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிதம்பரம்பிள்ளை தெய்வேந்திரம்பிள்ளை(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

இந்திரகுமார்(பழைய மாணவர்- யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, பொறியியலாளர் – சிட்னி), சிவகுமார்(பழைய மாணவர்- யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, பொறியியலாளர்- பிரிஸ்பேன்), சிதம்பரகுமார்(பரன்- பழைய மாணவர்- யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, வைத்தியர், சிட்னி), ஈஸ்வரகுமார்(பழைய மாணவர்- யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, மருத்துவப் பணியாளர்- சிட்னி), உதயராணி(பழைய மாணவி- யாழ் இந்து மகளிர் கல்லூரி, ஆசிரியை, பிரித்தானியா), பிரேமகுமாரி (பழைய மாணவி- வேம்படி மகளிர் கல்லூரி, ஆசிரியை, பிரித்தானியா), கலாராணி(பழைய மாணவி – வேம்படி மகளிர் கல்லூரி, ஆய்வுகூட நிபுணர், சிட்னி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், அருளம்பலம், குணரத்தினம், பராசக்தி, பரமேஸ்வரி, தனலெட்சுமி, சிவயோகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பராசக்தி இலட்சுமணப்பிள்ளை, பாக்கியலட்சுமி பேரம்பலம், இரத்தினபூபதி சோமசுந்தரம், சொர்ணலிங்கம், மாசிலாமணி, வல்லிபுரம், கங்கைவேணியன் மற்றும் சத்தியரூபவதி குணரத்தினம்(சிட்னி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரேமளச்செல்வி, சிவபாலன், கோணேஸ்வரி, கீதா, மதியழகன், தேவராஜா, சந்திரிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரஷாந், ஐஸ்வர்யா- பிரஷாந், தாட்சாயினி ஐசாக், டெக்ஸ்ரர் ஐசாக், கோகுலன், தனுஷன், சிவஆரணி, அனோஜன், நிலாங்கா அனோஜன், யாழினி நிஷாந்த், நிஷாந்த் குணசேகரம், இந்துஜன், கதரின் இந்துஜன், சைலா, அபிலாசினி, அச்சுதன், சோபன், ஆருணி, ஷாலினி, அனோஜி, அபிமன், அஷ்சயா, ஆரதி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தாரகை, அரேயா, ஸ்கை, நெத்தானியல், எஸ்லா, சார்ழி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-01-2021 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 01:30 மணிவரை சிட்னி மேற்கு மின்ஞ்சென்பெரியில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.கொரோனா தீநுண்மிப் பரவலாலும், தற்போதைய ஒன்றுகூடல் கட்டுப்பாடுகளாலும் சிவப்பேறு தொடர்பான சடங்குகள் குடும்பத்தினருடன் மட்டும் நடைபெறும் என்பதனை அறியத்தருவதோடு, இணையவழி நேரலையை கீழுள்ள இணைய முகவரியில் காணலாம்.அந்த நேரத்தில், அம்மாவின் உயிர் எல்லாம் வல்ல பரம்பொருளின் பாதங்களில் மீண்டும் பிறப்பில்லாத பேரின்பப் பெருவாழ்வு அடைய வேண்டுமென்று சிவபரம்பொருளை வேண்டி வழிபடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
நேரலை முகவரி: Click Here
நுழைவுச்சொல்: sahara@saharafunerals.com.au
கடவுச்சொல்: 82PV6Vதகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
இந்திரகுமார் – மகன்Email : Send MessageMobile : +61421328385

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu