பெயர் : இளையதம்பி நடராஜா (ஆறுமுகம்)
பிறப்பு :
இறப்பு : 2013-11-27
பிறந்த இடம் : சுதுமலை
வாழ்ந்த இடம் : மானிப்பாய்
பிரசுரித்த திகதி : 2013-12-23
சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், மேதர்ஸ்லேன், மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி செல்லாச்சியின் அன்பு மகன் இளையதம்பி நடராஜா (ஆறுமுகம்) நேற்று (27.11.2013) புதன்கிழமை கர்த்தருக்குள் நித்திரை அடைந்து விட்டார்.
அன்னார் இராசலட்சுமியின் அன்புக் கணவரும், லிங்கேஸ்வரி, பத்மதேவா, சிவனேஸ்வரி, பத்மராஜா, காலஞ்சென்ற கமலேஸ்வரி மற்றும் பத்மசூரியா, பத்மசேகரா, பத்மசீலன் (பிரான்ஸ்), ஆகியோரின் அன்பு தந்தையும், சின்னராஜா, காலஞ்சென்ற உதயா மற்றும் ஆனந்தன், காலஞ்சென்ற கல்யாணி மற்றும் சுரேஸ், சந்திரன் வதனா, ஷகிலா (பிரான்ஸ்) ஆகியோரின் மாமனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை இன்று (28.11.2013) வியாழக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, பி.ப 3.00 மணிக்கு பூதவுடல் தாவடி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் : பேரப்பிள்ளைகள்.
தொடர்புகளுக்கு
பேரப்பிள்ளைகள். – , 021 490 2730