திருமதி சிங்கராயர் இராஜேஸ்வரி (மலர்) – மரண அறிவித்தல்




திருமதி சிங்கராயர் இராஜேஸ்வரி (மலர்)
பிறப்பு 09 MAR 1940 இறப்பு06 OCT 2020

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிங்கராயர் இராஜேஸ்வரி அவர்கள் 06-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து மரியம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிங்கராயர் அவர்களின் அன்பு மனைவியும்,

ரொணி எல்விஸ் அவர்களின் ஆருயிர்த் தாயாரும்,

எமிலியானுஸ், பூமணி, காலஞ்சென்ற கமலா, வர்ணம், சூசைப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும், தனேஸ் அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான மாலினி திரேஸ், மனோகரன், முத்துராணி மற்றும் அன்ரன் சூரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அஸ்ரிட், அணேஜா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 07-10-2020 புதன்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, சில்லாலை புனித கதிரை மாதா ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் சில்லாலை கதிரை மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ரொணி – மகன்Mobile : +33628905639

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu