திருமதி சரஸ்வதி இரத்தினம் – மரண அறிவித்தல்




Ms. Saraswathi gem
பெயர் : திருமதி சரஸ்வதி இரத்தினம்
பிறப்பு :
இறப்பு : 2013-11-15
பிறந்த இடம் : பலாலி
வாழ்ந்த இடம் : வசாவிளான்
பிரசுரித்த திகதி : 2013-11-17

பலாலி தெற்கு, வசாவிளானைப் பிறப்பிடமாகவும் கல்வளை வீதி, சண்டிலிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சரஸ்வதி இரத்தினம் நேற்றுமுன்தினம் (15.11.2013) வெள்ளிக்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஐயன்சின்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிசீதைவி தம்பதியரின் அன்பு மருமகளும், இரத்தினத்தின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற செல்வராசா மற்றும் இராசமணி, மகாலிங்கம், தேவராசா, காலஞ்சென்றவர்களான சபாவதி, சின்னத்தம்பி ஆகியோரின் அன்புச் சகோதரியும், புஸ்பராணி (லண்டன்), காலஞ்சென்ற சின்னத்துரை மற்றும் புஸ்பம், செல்வராணி, மையிலர், துரையர், பாக்கியநாதன், காலஞ்சென்ற சின்னத்தம்பி மற்றும் அன்னப்பிள்ளை ஆகியயோரின் அன்பு மைத்துனியும், சுவிதரன், சுகந்தி, சுரேஸ், கௌசலா, மயூரன் (பிரான்ஸ்) சதீஸ்குமார் (டோகா) , சதீஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயும், உஷா, சாந்தன், சாந்தா, கணேஸ் ஆகியோரின் அன்பு மாமியும், ரிஷானா, அபிஷியன், கஜிந்தன், செங்கவி, மதுஷா, டனு ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (17.11.2013) ஞாயிற்றுக்கிழமை மு.ப. 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக அளவெட்டி வடக்கு கொட்டுப்பனை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிரந்தரமுகவரி: பலாலி தெற்கு, வசாவிலான்
தற்காலிக முகவரி: கல்வளை வீதி, சண்டிலிப்பாய்.

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர். – கல்வளை வீதி, சண்டிலிப்பாய். ,

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu