திருமதி சிவகாமசெளந்தரி கதிர்காமநாதன் – மரண அறிவித்தல்




திருமதி சிவகாமசெளந்தரி கதிர்காமநாதன்
பிறப்பு 10 AUG 1944 இறப்பு 26 MAR 2020

யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கொழும்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சிவகாமசெளந்தரி கதிர்காமநாதன் அவர்கள் 26-03-2020 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை(ஓய்வுபெற்ற அதிபர்) பொன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான கனகசபை(உரிமையாளர்- K.S.K மோட்டோர்ஸ்) இலட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கதிர்காமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

கேதீஸ்வரி(உமா- பிரித்தானியா), கெளரி(ஆசிரியை- இல்மா முஸ்லிம் வித்தியாலயம், பாணந்துறை), கேசவன்(பிரித்தானியா), கெளரீசன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி- சுந்தரலிங்கம், சரவணபவன்(ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தர்- தென்மராட்சி கல்வி வலயம்), கணேசமூர்த்தி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பகீரதன்(பிரித்தானியா), முரளி(அதிபர்- தெகிவளை தமிழ் மகாவித்தியாலயம்), பங்கஜவாணி(பிரித்தானியா), ஜெசிக்கா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பரமேஸ்வரி- பரமநாதன்(கனடா), குமாரசாமி(முன்னாள் சிறாப்பர்- யாழ் பல்கலைக்கழகம்), சிவஞானேஸ்வரி- தவேந்திரன்(ஓய்வுபெற்ற ஆசிரியை- பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கீர்த்தன், ஹரினி, தசாரகன், மேகா, அபித், அபியோனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 27-03-2020 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: பிள்ளைகள், மருமக்கள்

தொடர்புகளுக்கு
கெளரி – மகள்Mobile : +94771980967
முரளி – மருமகன்Mobile : +94718388303
கேசவன் – மகன்Mobile : +447958706053

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu