திரு தாமோதரம்பிள்ளை கதிரேசு
பிறப்பு 22 DEC 1925 இறப்பு 08 NOV 2019
யாழ். நெடுந்தீவு பெரிய தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை கதிரேசு அவர்கள் 08-11-2019 வெள்ளிக்கிழமை அன்று இலங்கையில் காலமானார்.
அன்னார், தாமோதரம்பிள்ளை(பசுபதியார்) தங்கம்மா தம்பதிகளின் ஏக புத்திரரும், முத்துசாமி(செல்லப்பா- அனலைதீவு) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சேதுப்பிள்ளை அவர்களின் பாசமிகு கணவரும், வரதராஜா, டில்லிராஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராஜேஸ்வரி, சாந்தினி தம்பதிகளின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற அன்னலட்சுமி, சபாபதி, கனகம்மா மற்றும் சொர்ணம்மா, மனோன்மணி, நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற செல்லையா, கார்த்திகேசு மற்றும் சொர்ணம்மா, குலசிங்கம், பாலசிங்கம், ஞானாம்பிகை ஆகியோரின் சகலனும்,
ராஜலக்சுமி, ராஜிவ்குமார், ராஜேந்தினி, சார்ஜினி, மிதுலன், சிவாஜினி, சுஜிவன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வரதராஜா – மகன்Mobile : +94773430128
டில்லிராஜா – மகன்Mobile : +94773996286