திரு கைலாசபிள்ளை உடையார் இராமநாதன் (முன்னாள் கிராம சேவையாளர்- ஒட்டுசுட்டான், ஓய்வுபெற்ற பாதுகாப்பு அமைச்சு மொழி பெயர்ப்பு ஆய்வாளர்- கொழும்பு)
பிறப்பு :04-ஆகஸ்ட்-1932
இறப்பு :08-டிசம்பர்-2013
முல்லைத்தீவு கரிப்பட்டமுறிப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெகிவளையை வதிவிடமாகவும் கொண்ட கைலாசபிள்ளை உடையார் இராமநாதன் அவர்கள் 08-12-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி கைலாசபிள்ளை உடையார் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
சத்தியபாமா(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயமுகுந்தா(சுவிஸ்), ஜெனகன்(தெகிவளை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தங்கமுத்து, காசித்தம்பி, மற்றும் சிவபாக்கியம்(கரிப்பட்டமுறிப்பு), காலஞ்சென்ற தர்மலிங்கம், சரஸ்வதி(புதூர்), காலஞ்சென்ற நவரட்ணம், சோமசேகரம்(வவுனியா), காலஞ்சென்ற பஞ்சாட்சரம், கனகரட்ணம்(கரிப்பட்டமுறிப்பு), புவனேஸ்வரி(வவுனியா), தம்பிராசா(கனடா), மகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வரஞ்சினி(சுவிஸ்), கஸ்தூரி(தெகிவளை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆதர்சனன்(சுவிஸ்), அஸ்வினி(சுவிஸ்), சாதனா, சுதேசனா(தெகிவளை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் தெகிவளை மகிந்த மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 10-12-2013 செவ்வாய்க்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயமுகுந்தா — சுவிட்சர்லாந்து தொலைபேசி :+41269243524
ஜெனகன் — இலங்கை செல்லிடப்பேசி :+94711915595 தொலைபேசி :+94112730505