திருமதி மகேஷ்வரி கணேசன் – மரண அறிவித்தல்




திருமதி மகேஷ்வரி கணேசன்
பிறப்பு 17 MAY 1944 இறப்பு 22 SEP 2019

இந்தியா திருச்சி காவேரி பட்டி கிராமத்தைப் பூர்விகமாக கொண்டிருந்த மகேஷ்வரி கணேசன் அவர்கள் 22-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், கணேசன் பிள்ளை(ஜெயலலிதா ஜுவர்லர்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கிருஷ்ணசாமி – மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பையாபிள்ளை, தைலம்பை அம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ராதை, லதா, உஷா ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற சிவகுமார், சிவராஜ் ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற ராஜேஸ்வரி(பொரளை), சுப்புலட்சுமி, தியாகராஜா, மோகன்ராஜ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கருப்பையாபிள்ளை(திருச்சி), சிவலிங்கம் பிள்ளை(சென்னை), காலஞ்சென்ற ராஜேஸ்வரி(துறையூர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற பெரியண்ணன் – தெய்வானை, காலஞ்சென்ற பாலச்சுப்பிரமணியம் பிள்ளை(தம்பத்தனை), சுலோச்சனா(பெங்களூர்) ஆகியோரின் அன்பு சம்பந்தியும்,

யாதவ் விக்னேஷன், அஜிதாபன், ஷ்ரவன்குமார் ஆகியோரின் அன்பு அம்மாயியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 24-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று இல.1-1/1, கொத்தலாவ பிளேஸ் அசோகா கார்டின்ஸ், பம்பலப்பிட்டியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 25-09-2019 புதன்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று பொரளை மயானத்தில் பிற்பகல் 03:30 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
மோகன்ராஜ்Mobile : +94714500068
சிவராஜ்Mobile : +94755945875

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu