திரு முத்துக்குமாரு சுருளிமலைராஜா – மரண அறிவித்தல்




திரு முத்துக்குமாரு சுருளிமலைராஜா
பிறப்பு 10 JUL 1939 இறப்பு 17 AUG 2019

யாழ். தொல்புரம் வழக்கம்பரையைப் பிறப்பிடமாகவும், தாவளை வட்டுக்கிழக்கு, திருகோணமலை, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு சுருளிமலைராஜா அவர்கள் 17-08-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு, திருமதி முத்துக்குமாரு தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பொன்னையா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மல்லிகாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சாந்தி, சுகந்தி, குமரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஆறுமுகம், ஜெயக்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆரணி, ஆத்மிகா, பிரன்னா ஆகியோரின் அன்புப் பேரனும்,

மாதுளன், மதுஷன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 19-08-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 08.00 மணியளவில் அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் மு.ப 10.00 மணியளவில் வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction No. 19, இராஜதுரை வீதி, வைரவபுளியங்குளம், வவுனியா

தொடர்புகளுக்கு
மல்லிகாதேவி – மனைவி Mobile : +94771912082
குமரன் – மகன் Mobile : +14166485321
ஆறுமுகம் – மருமகன் Mobile : +94777587873
ஜெயம் – மருமகன் Mobile : +94771998510

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu