திரு நடராசா தவராசா
அன்னை மடியில் 21 OCT 1961 இறைவன் அடியில் 20 JUN 2019
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கோனாவில், கிளிநொச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா தவராசா அவர்கள் 20-06-2019 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா பராசக்தி தம்பதிகளின் இளைய புதல்வரும், காலஞ்சென்ற துரைசிங்கம், தவமணிதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
யோகேஸ்வரி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
தர்சனி(லண்டன்), சுதர்சனி(லண்டன்), தயாழினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யோகேஸ்வரன், மகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அருந்தவராசா அவர்களின் அன்புச் சகோதரரும்,
ஜெகநாதன், ஜெராட், செல்வநாதன், றெஜிதரன், காலஞ்சென்ற பாஸ்கரன் மற்றும் ஜெகதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யோஜினி, யோஜன், டியா, நேகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 21-06-2019 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பு பொரளை லங்கா மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 23-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கோனாவில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 24-06-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் உருத்திரபுரம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பத்மா Mobile : +94752229670
டிசாந்த் – மருமகன் Mobile : +94752212929
வீடு Phone : +94112324201