திருமதி வாமதேவா விமலாதேவி (தேவி)
தோற்றம் 30 JUN 1953 மறைவு 17 JUN 2019
யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட வாமதேவா விமலாதேவி அவர்கள் 17-06-2019 திங்கட்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் விக்னேஸ்வரி தம்பதிகளின் மகளும்,
காலஞ்சென்ற வாமதேவா அவர்களின் மனைவியும்,
ஜவகர்லால் நேரு(துபாய்) அவர்களின் தாயாரும்,
பவித்திரா அவர்களின் மாமியாரும், சாவித்திரிதேவி(கனடா), காலஞ்சென்ற இந்திராதேவி, மற்றும் வசந்தன், நந்தகுமார்(நந்தன் டிஜிட்டல்) ஆகியோரின் சகோதரியும்,
செந்தூரன் அவர்களின் சிறிய தாயாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20-06-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 08.30 மணியளவில் மானிப்பாய் வீதி கோம்பயன்மணல் மயானத்தின் அருகாமையில் அமைந்துள்ள இன்பம் மலர்சாலையில் வைக்கப்பட்டு, பி.ப 12.30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02.30 மணிக்கு கோம்பயன்மணல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நந்தன் – சகோதரர் Mobile : +94777734676
செந்தூரன் – பெறாமகன் Mobile : +94777043561