திருமதி தங்கேஸ்வரி நாகராசா – மரண அறிவித்தல்
பிறப்பு 30 NOV 1930 இறப்பு 04 MAR 2019
யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரி நாகராசா அவர்கள் 04-03-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற இரத்தினசிங்கம், பூரணம் தம்பதிகளின் மகளும், இராசையா ஆச்சிமுத்து தம்பதிகளின் மருமகளும், காலஞ்சென்ற நாகராசா(சிறாப்பர் யாழ். மாநகரசபை) அவர்களின் மனைவியும், இந்திரகுமார்(பிரான்ஸ்), கந்தகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் தாயாரும், காலஞ்சென்ற தமயந்தி, பத்மநாதன், தில்லைநாதன்(லண்டன்), காலஞ்சென்ற பரமேஸ்வரநாதன், Dr.கதிர்காமநாதன், மாணிக்கதியாகநாதன், காலஞ்சென்ற கனேஸ்வரி, கனேஸ்வரநாதன்(லண்டன்) ஆகியோரின் சகோதரியும், சோமரசி, சசிதேவி ஆகியோரின் மாமியாரும், சஞ்சய், சயான், லுசானி, நிகேகா, நிசோ, நிவேத் ஆகியோரின் பாட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 07-03-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction இல. 51, மணல்தறை ஒழுங்கை, கந்தர்மடம்
தொடர்புகளுக்கு
இந்திரன் Mobile : +33611683173 கந்தன் Mobile : +33627687860