திரு சின்னத்துரை சரவணபவன் – மரண அறிவித்தல்




திரு சின்னத்துரை சரவணபவன் – மரண அறிவித்தல்
(தொழிலதிபர்- Malba Robes Sinpon Corporation (Pvt). Ltd )
பிறப்பு 04 JUL 1936 இறப்பு 21 JAN 2019

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பம்பலப்பிட்டி 30 ஹேக் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை சரவணபவன் அவர்கள் 21-01-2019 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான E.S.S. சின்னத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும், மல்லிகாதேவி அவர்களின் அன்புக் கணவரும், தேவசுரேபி, காலஞ்சென்ற சுதாகர், முரளீதரன், காண்டீபன், Dr. பிரதீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அபிராமி அவர்களின் அன்பு பெரியத் தந்தையும், காலஞ்சென்ற இலங்கநாதன், பரமேஸ்வரன், பத்மநாதன், இராமநாதன், பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவதாசன், டானியா, லஷ்மி, Dr. விமாலி, நந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும், அச்சுதன், சேரணியா, அவ்னீஸ், ஆருத்திரன், ஆரஷ்னா ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும், சுலோசனாதேவி, சந்திரமோகன், காலஞ்சென்ற அருளம்பலம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-01-2019 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: காண்டீபன்(மகன்)
தொடர்புகளுக்கு
காண்டீபன் – மகன் Mobile : +94777701695

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu