திரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா) – மரண அறிவித்தல்




திரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா) – மரண அறிவித்தல்
பிறப்பு 27 NOV 1950 இறப்பு 10 DEC 2018

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை நடேசலிங்கம் அவர்கள் 10-12-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை அன்னம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் நேசரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும், மகேந்திரராணி அவர்களின் பாசமிகு கணவரும், தயான்(பிரான்ஸ்), தஷ்ஷன்(பிரான்ஸ்), தாரணி(பிரான்ஸ்), தனுஷன்(அபிவிருத்தி உத்தியோகத்தர்- கடற்தொழில் நீரியல்வளத்துறை திணைக்களம்), தர்சினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இராசலிங்கம், அருணகிரி, புனிதவதி, புண்ணியகாந்தன் மற்றும் கணேசலிங்கம், திலகவதி, விமலாதேவி ஆஅகியோரின் அன்புச் சகோதரரும், ஜெயதேவி, கௌதமி, கேதீஸ்வரன், வானதி, சதீஸ்பாபு ஆகியோரின் அன்பு மாமனாரும், சீராளதேவன்(லண்டன்) அவர்களின் அன்பு மைத்துனரும், தனிஷனா, அக்‌ஷாரா, இசையா, ஹர்ணி, ஹர்சித், ஹர்ணிதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 13-12-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மண்டைதீவு தலைக்கீரி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction இல.588/8, நாவலர் வீதி, அரியாலை, யாழ்ப்பாணம்
தொடர்புகளுக்கு
தனுஷன் Mobile : +94776486335 தஷ்ஷன் Mobile : +33604517626

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu