திருமதி நல்லம்மா தங்கராஜா – மரண அறிவித்தல்




திருமதி நல்லம்மா தங்கராஜா – மரண அறிவித்தல்
தோற்றம் 21 NOV 1938 மறைவு 04 DEC 2018

யாழ். கோப்பாய் வடக்கு கலம்பரையைப் பிறப்பிடமாகவும், நுணாவில் மேற்கு சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லம்மா தங்கராஜா அவர்கள் 04-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று கோப்பாயில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா லக்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தங்கராஜா(ஓய்வுபெற்ற தபால் ஊழியர்- சாவகச்சேரி) அவர்களின் அன்பு மனைவியும்,

விக்னேஸ்வரன்(ஜெர்மனி), விமலேஸ்வரி(லண்டன்), காலஞ்சென்ற விமலேஸ்வரன், விமலினி(டென்மார்க்), விமலராஜ்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தட்சாயினி, ராதாகிருஷ்ணன், சுபநாதன், றஜித்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கமுத்து, சுப்பிரமணியம் மற்றும் கந்தசாமி, இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பொன்னம்மா, யோகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சரீபன், கிருஷ்சியன், அஸ்வின், தனுசன், தனியா, அக்‌ஷன், கிசோத், சயன், சர்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-12-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது கோப்பாய் இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோப்பாய் கந்தன்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஞானச்சந்திரன் Mobile : +94770083129 அப்பன் Mobile : +447947227455

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu