பெயர் : திருமதி பத்மநாதன் சிவயோகம்
பிறப்பு : –
இறப்பு : 2013-01-07
பிறந்த இடம் : சாவகச்சேரி
வாழ்ந்த இடம் : கிளிநொச்சி
பிரசுரித்த திகதி : 2013-01-08
திருமதி பத்மநாதன் சிவயோகம் (இளைப்பாறிய ஆசிரியை கிளி/வட்டக்கச்சி மகாவித்தியாலயம்) சரசாலை வடக்கு சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் 146, கட்சன் வீதி வட்டக்கச்சி கிளிநொச்சியை நிரந்தர முகவரியாகவும் மூன்றாம் கட்டை ஆனைக்கோட்டையை தற்காலிக முகவரியாகவும் கொண்ட பத்மநாதன் சிவயோகம் நேற்று (07.01.2013) திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னையா மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மகளும், பத்மநாதனின் (ஓய்வு பெற்ற பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை லிகிதர்) அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான பரியாரியார் பொன்னுத்துரை தெய்வானை தம்பதியினரின் (மட்டுவில்) அன்பு மருமகளும், ஸ்ரீவாணி (ஆசிரியை கொக்குவில் இந்துக் கல்லூரி), செல்வரஞ்சினி, குகநாதன் (உதவி அரசாங்க அதிபர், கரைத்துறைப் பற்று முல்லைத்தீவு) ஆகியோரின் அன்புத் தாயாரும், திலீபன் (அதிபர், கிளி/முக்கொம்பன் அ.த.க பாடசாலை), கேதீஸ்வரன், சிவசாந்தினி (விரிவுரையாளர், விஞ்ஞானபீடம், யாழ். பல்கலைக்கழகம்) ஆகியோரின் மாமியும், சிவபாக்கியம், இராயேஸ்வரி காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை தங்கராசா ஆகியோரின் சகோதரியும் யோகம்மா, சிவபாக்கியம், சுந்தரலிங்கம், கமலாதேவி, பராசக்தி, பொன்னுத்துரை, காலஞ்சென்றவர்களான பொ.கந்தசாமி, கந்தசாமி ஆகியோரின் மைத்துனியும், நிமோசாயன், தசாயனன், பவசாரனி, தனுசாயினி, கௌசிகாந், பிரியதர்சன், சிந்தூரி, கேதாரகன் ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (08.01.2013) செவ்வாய்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : பொ.பத்மநாதன் (கணவர்)
தொடர்புகளுக்கு
பொ.பத்மநாதன் (கணவர்) – 3ஆம் கட்டை மானிப்பாய் வீதி, ஆனைக்கோட்டை.