திரு சந்தியா அந்தோனிப்பிள்ளை (பவுண் சம்மட்டி) – மரண அறிவித்தல்




திரு சந்தியா அந்தோனிப்பிள்ளை (பவுண் சம்மட்டி) – மரண அறிவித்தல்
தோற்றம் : 13 யூன் 1946 — மறைவு : 26 ஓகஸ்ட் 2018

யாழ். செம்பியன்பற்று வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சந்தியா அந்தோனிப்பிள்ளை அவர்கள் 26-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சந்தியா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான லீனப்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சாந்தா(மறை ஆசிரியை- புனித பிலிப்பு நேரியார் ஆலயம்), றீக்கா(முன்பள்ளி ஆசிரியை- செம்பியன்பற்று வடக்கு), காலஞ்சென்றவர்களான இன்பறாஜ், றீகறாஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திரேசம்மா, நேசமுத்து, றோசா லூயிஸ் நாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நேசன் அவர்களின் அன்பு மாமனாரும்,

சிறான், ஆகாஸ், அயினாஸ், செனோபியன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 27-08-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தனு(இத்தாலி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94762299480

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu