திரு செல்லத்துரை நித்தியானந்தன் – மரண அறிவித்தல்
(ஓய்வுபெற்ற ஆசிரியர் பம்பலபிட்டி இந்துக் கல்லூரி)
அன்னை மடியில் : 16 டிசெம்பர் 1960 — இறைவன் அடியில் : 1 யூலை 2018
யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை நித்தியானந்தன் அவர்கள் 01-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கனகாம்பிகை தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற செல்லத்துரை, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தராணி அவர்களின் அன்புக் கணவரும்,
நிஷாந்தி, அனோசன், ஆருசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சத்தியவதி(உமா), விவேகானந்தன், தயந்தினிதேவி, சச்சிதானந்தன், மற்றும் சாரதாதேவி, சதானந்தன், பிரேமானந்தன், தயானந்தன், தயானிதேவி, குகானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தியாகராசா, திருப்பரன், கவிப்பிரியா, காலஞ்சென்ற பவளராணி, ரவீந்திரன், ரூபகாந்தன், உதயகுமார், கலாராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
உமாரஞ்சனி, கபிராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கபிஷன், ஜானுஜன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 03-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரைக்கும், 04-07-2018 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 12:00 மணிவரைக்கும் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகளின் பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வசந்தராணி(மனைவி) — இலங்கை
தொலைபேசி: +94112553544
அணோசன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94771942014
ரவீந்திரன்(மைத்துனர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94775298781